தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீயணைப்பு நிலையம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்

விளாத்திகுளம்,அக்.30: விளாத்திகுளத்தில் இருந்து வேம்பார் சாலை வழியாக விருச்சம்பட்டி, வேடப்பட்டி, ஓ.லட்சுமிநாராயணபுரம், நெடுங்குளம், ஈ.வேலாயுதபுரம், பல்லாகுளம், தத்தனேரி, குறளயம்பட்டி, இலந்தைகுளம், லெக்கம்பட்டி, மாமுநைனார்புரம், வேம்பார், காரைக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விளாத்திகுளத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே போதிய வேகத்தடைகள் மற்றும் மின்விளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் விளாத்திகுளம் அதிமுக சார்பில் விபத்து ஏற்படும் பகுதியில் சாலையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும், மேலும் விபத்து பகுதி என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று விளாத்திகுளம் அதிமுக கிழக்கு ஒன்றியச்செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், மத்திய ஒன்றிய செயலாளர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலையில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் விளாத்திகுளம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சண்முகசாமி, நகர துணைச்செயலாளர் ஆசைத்தம்பி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் ஆனந்த் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Advertisement

Advertisement