தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூத்துக்குடியில் அகில இந்திய அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கூடைபந்து போட்டி இன்று துவக்கம்

தூத்துக்குடி,அக்.29: தூத்துக்குடி மாவட்ட கூடை பந்தாட்ட கழக தலைவர் பிரம்மானந்தம், செயலாளர் சாகுல் சிவாஜிதீன், பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் 15வது ஆண்டாக வ.உ.சி துறைமுக ஆணைய கோப்பைக்கான அகில இந்திய அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த ஆண்டிற்கான போட்டிகள் தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பில் இன்று (29ம் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டியை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைக்கிறார். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு துறைமுக ஆணைய கோப்பைகளும், சுமார் மூன்று லட்ச ரூபாய் மதிப்பில் ரொக்க பரிசுகளும் வழங்கப்படும். போட்டி முடிவில் தூத்துக்குடி துறைமுக ஆணைய தலைவர் சுஷாந்த்குமார் புரோகித், ஆணையத் துணைத்தலைவர் ராஜேஷ் சௌந்தர்ராஜன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்க உள்ளனர். பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Related News