தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூத்துக்குடி சிலுவைபட்டி விநாயகர் கோயிலில் பூட்டை உடைத்து பொருட்கள் திருடிய வாலிபர்கள் மூவர் கைது

தூத்துக்குடி, அக். 24: தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலுவைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் உள்ள பூட்டை கடந்த அக்.18ம் தேதி மர்மநபர்கள் உடைத்தனர். மேலும் அக்கோயிலில் உள்ள வெண்கல மணி, கோயில் குத்துவிளக்கு‌, வெண்கல தட்டு உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பூஜை பொருட்களை திருடிச்சென்றனர். பின்னர் இதுகுறித்து கோயில் தர்மகர்த்தா அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர்களான முத்துக்குமாரின் மகன் கருப்பசாமி (19), கருப்பசாமியின் மகன் பாலவிக்னேஷ் (22), மாரிமுத்துவின் மகன் முகேஷ் (20) ஆகியோர் மேற்கண்ட கோயிலின் பூட்டை உடைத்து பூஜை பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைதுசெய்த போலீசார். அவர்களிடம் இருந்த வெண்கல மணி, வெண்கல தட்டு, குத்து விளக்கு போன்ற ரூ.20,000 மதிப்புள்ள பூஜை பொருட்களை மீட்டனர். மேலும் இதில் வேறு யாரேனுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News