தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாத்தான்குளம் அருகே வேலாயுதபுரத்தில் புனித குழந்தை தெரசம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சாத்தான்குளம், செப். 24: வேலாயுதபுரம் புனித குழந்தை தெரசம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாத்தான்குளம் அருகே சிதம்பரபுரம் பங்கிற்குட்பட்ட வேலாயுதபுரம் புனித குழந்தை தெரசம்மாள் ஆலய திருவிழா, நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா அக்.1ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் மாலை 6:30 மணிக்கு சொக்கன்குடியிருப்பு அருட்தந்தை லியோன் தலைமையில் ஜெபமாலை மற்றும் திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து திருப்பலி நடந்தது. வள்ளியூர் அருட்தந்தை மணி மறையுரை ஆற்றினார். தொடர்ந்து 2ம் நாள் முதல் 8ம் நாள் வரை திருப்பலி, ஜெபமாலை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 9ம் நாளான செப்.30ம் தேதி சாத்தான்குளம் வட்டார முதன்மை குரு செல்வ ஜார்ஜ் தலைமையில் காலையில் ஜெபமாலை, திருப்பலி, மற்றும் மாலை ஆராதனை நடக்கிறது.

Advertisement

தென்மண்டல பொது நிலையினர், பணியக இயக்குநர் ரியோ சிஸ் பெப்பி மறையுரை ஆற்றுகிறார். 10ம் நாளான அக்.1ம் தேதி காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் முன்னிலை வகிக்கிறார். இதில் சாத்தான்குளம் வட்டார முதன்மை குரு செல்வ ஜார்ஜ், தென் மண்டல பொறுப்பருட் தந்தை வெனிஸ், தென் மண்டல ஆர்.சி பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். இரவு 7 மணிக்கு கொடி இறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சிதம்பரபுரம் பங்குத்தந்தை ஜோசப் கலைச்செல்வன் மற்றும் இறை மக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement

Related News