தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொன் விழா ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் பொன் விழா ஆண்டு திருவிழா

கொடியேற்றத்துடன் தொடக்கம் சாத்தான்குளம், செப். 23: சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிவிளை பார் போற்றும் பரலோக அன்னை ஆலய திருவிழா, நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா அக்.2ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் காலை நாள் திருப்பலி, மாலை சாத்தான்குளம் வட்டார முதன்மை குரு செல்வ ஜார்ஜ் தலைமையில் திருச் ஜெபமாலை, திருக் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து பிரார்த்தனை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. அருட்தந்தை ஜெபநாதன் முன்னிலை வகித்தார். இதில் தென்மண்டல பொறுப்பருட்தந்தை வெனிசு குமார், கொழுந்தட்டு பங்குத்தந்தை பீட்டர் பால், பெரியதாழை பங்குத்தந்தை சகேஷ் சந்தியா, துணை பங்குத்தந்தை ஜோசப் உள்ளிட்ட திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

2ம் நாள் முதல் 9ம் நாள் வரை நவநாள் திருப்பலி, ஜெபமாலை பிரார்த்தனை, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 10ம் நாளான செப்.30ம் தேதி தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டறிக்கை தலைமையில் காலை 7 மணிக்கு பெருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி, முதல் திருவிருந்து உறுதி பூசுதல், ஆலய பொன்விழா மலர் வெளியிடல் நடக்கிறது. காலை 11 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை அன்னையின் அற்புத திருவுருவ தேர் பவனி நடக்கிறது. 11ம் நாளான அக்.1ம் தேதி காலை ஆலய முதல் பங்குத்தந்தை அமலதாஸ் தலைமையில் தேரடி சிறப்பு நற்கருணை ஆசீர், தேரடி சிறப்பு திருப்பலி நடக்கிறது.

மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப் ரவி பாலன் தலைமையில் பிரார்த்தனை, திரு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர் உள்ளிட்டவை நடைபெறுகிறது. நிறைவு நாளான அக்.2ம் தேதி செட்டிவிளை பங்குத்தந்தை அந்தோணி தாஸ் தலைமையில் காலை திரு ஜெபமாலை, பிரார்த்தனை, சிறப்பு நன்றி திருப்பலி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு ஊர் பொது அசனம் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை செட்டிவிளை பங்குத்தந்தை அந்தோணிதாஸ் தலைமையில் திரு இருதய அருட்சகோதரிகள், ஊர் நிர்வாக குழு மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement