தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டீக்கடைக்குள் புகுந்த அரசு விரைவு பஸ்

எட்டயபுரம், செப். 23: எட்டயபுரம் அருகே டீக்கடைக்குள் அரசு விரைவு பேருந்து புகுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு விரைவு பேருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர். பேருந்தை ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த சொரிமுத்து ஓட்டினார். நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 4 மணியளவில் மதுரை -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே எம்.கோட்டூர் விலக்கு பகுதியில் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகேயுள்ள டீக்கடையில் மோதி நின்றது. அதிகாலை நேரம் என்பதாலும் கடை பூட்டி இருந்ததாலும் யாருக்கும் பெரிய பாதிப்பில்லை. டிரைவருக்கும், பேருந்தின் முன்பகுதியில் இருந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு எம்.கோட்டூர் விலக்கில் கர்ப்பிணி மனைவியை பார்க்க பைக்கில் சென்ற கணவர் கார் மோதி பலியானார். இதையடுத்து அவ்வழியாக செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த அப்பகுதியில் போலீசார் பேரிகார்டு வைத்தனர். ஆனால் பேரிகார்டு தடுப்புகளை தாண்டி டீக்கடையில் பேருந்து மோதிய சம்பவம், இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement