தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவில்பட்டி அருகே தகுதிச்சான்று புதுப்பிக்காமல் இயக்கிய வாகனங்கள் பறிமுதல்

கோவில்பட்டி, நவ.22 கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் தகுதிச்சான்று புதுப்பிக்காமல் இயக்கிய வாகனங்களை, போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், வாகனங்கள் தகுதிச்சான்று இன்றி இயக்கப்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து, சாலைகளில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களும், சட்டத்திற்கு உட்பட்டு அதற்கான அனுமதி சான்றிதழை பெற்று இயக்க வேண்டும் என வாகன டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில், தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், விளாத்திகுளம் வட்டம், புதூர் பகுதியில் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்சன் மாசிலாமணி மற்றும் அலுவலர்கள் நடத்திய வாகன சோதனையின் போது, சட்டத்திற்கு புறம்பாக, தகுதிச்சான்று புதுப்பிக்காமல், பொதுச்சாலையில் இயக்கப்பட்ட 3 ஆட்டோ ரிக் ஷா, ஒரு லோடு ஆட்டோ ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக, கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Related News