தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குளத்தில் மணல் அள்ள எதிர்ப்பு ஆலங்குளம் அருகே கிராம மக்கள் போராட்டம்

ஆலங்குளம்,ஆக.19: ஆலங்குளம் அருகே குளத்தில் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குளம் அருகே ஓடைமறிச்சான் ஊராட்சி உடையாம்புளி அருகில் கருஞ்சேகரமுடையார் குளம் உள்ளது. சுமார் 72 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தில் கரம்பை மண் எடுக்க தனி நபருக்கு அரசு அனுமதி கொடுத்தனர். ஆனால் அந்த நபர் அதிக அளவில் சரள் மண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் கையில் பதாகையுடன் குளத்தில் மணல் அள்ளும் இடத்திற்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து ஆலங்குளம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சரள் மணல் எடுக்க நிறுத்தப்பட்ட டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது. இனி இக்குளத்தில் மணல் எடுக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று வருவாய் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement

Advertisement