தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேதமடைந்து கிடக்கும் ஆழ்வார்திருநகரி வாய்க்கால் பாலம் சீரமைக்கப்படுமா?

நாசரேத். அக். 16: ஆழ்வார்திருநகரியில் சேதமடைந்து கிடக்கும் வாய்க்கால் பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆழ்வார்திருநகரி மறவர் தெருவில் வாய்க்கால் பாலம் உள்ளது. இந்த பாலம் அருகே ஆலயம் மற்றும் வீடுகள் நிறைந்து காணப்படுகிறது. இதன் வழியாக தினமும் பஸ்கள் தவிர மற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இவ்வழியாகத் தான் செல்கின்றனர். மேலும் ஆழ்வார்திருநகரி ரயில் நிலையத்திற்கு செல்பவர்களும் இந்த தெரு வழியாகத் தான் செல்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் வாய்க்கால் பாலம் தடுப்பு சுவர் இடிந்து சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் காரணமாக பாலத்தில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. பாலத்தால் எந்த நேரத்திலும் பெரிய ஆபத்து வர வாய்ப்பு உள்ளது. பாலத்தை சீரமைத்து விரிவுப்படுத்தினால் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்து கிடக்கும் வாய்க்கால் பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், மாணவ- மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News