தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசின் 4 தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்

தூத்துக்குடி,அக்.14: ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 4 தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டுமென அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், கொம்பையா. ராமலட்சுமி, மனோன்மணி, நாகராஜன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புசாரா தொழில் சங்கங்களின் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு 44 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து, அதற்கு மாற்றாக 4 தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களையும், தொழிலாளர் நலவாரியங்களை பாதுகாக்கவும், நடப்பு சட்ட மன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் அல்லது சிறப்பு கொள்கை வகுக்க வேண்டும். நலவாரியங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் ஒரு சதவீதம் ஒதுக்க வேண்டும். ஒன்றிய, மாநில பட்ஜெட்டில் அமைப்புசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்புக்காக 3 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும். முத்தரப்பு தொழிலாளர் மாநாட்டை ஒன்றிய அரசு உடனே கூட்ட வேண்டும். மாவட்டம் தோறும் நலவாரியங்களுக்கான குறைதீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement