தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குரும்பூர் அருகே பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கும் சாலை சீரமைக்கப்படுமா?

உடன்குடி, நவ. 13: குரும்பூர் அருகே பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குரும்பூர் அருகேயுள்ள நாலுமாவடி ஊரக கால்நடை மருந்தகம் செல்லும் வழித்தடமான சாலை மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த சாலை பணிக்கநாடார்குடியிருப்பு பள்ளி சாலை காயாமொழி, பூச்சிக்காடு செல்லும் சாலையை இணைக்கிறது. இந்த சாலை அமைத்து பல ஆண்டுகளான நிலையில் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் தற்போது தார் சாலை கற்சாலையாக காட்சியளிக்கிறது. தார்கள் பெரும்பாலான பகுதிகளில் உடைந்து கற்கள் பெயர்ந்து சரள் சாலையாக மாறி விட்டது. சில பகுதிகளில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. உயிரிழப்பு போன்று அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement