தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்
தூத்துக்குடி,அக்.11: கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அக்டோபர்-2025 மாதத்திற்கான சிறப்பு முகாம் இன்று (11ம் தேதி)இரண்டாவது சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல், போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.