தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடக்குகாரசேரியில் ரூ.4.30 கோடியில் இருவழிச்சாலை விரிவாக்கப் பணிகள்

செய்துங்கநல்லூர், டிச. 9: வடக்குகாரசேரியில் ரூ.4.30 கோடியில் ஒருவழிச்சாலையை இருவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளை சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெய்வச்செயல்புரத்தில் இருந்து புளியம்பட்டி வழியாக கடம்பூர் வரை செல்லும் ஒரு வழிச்சாலை இருவழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வடக்குகாரசேரி கிராமத்தில் இருந்து 2.300 கிமீ தூரத்திற்கு ஒரு வழிச்சாலையை இருவழிச்சாலையாக மாற்றும் பணிகளுக்கு நெடுஞ்சாலைத்துறை உள்கட்டமைப்பு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் தொடக்க நிகழ்ச்சி, வடக்குகாரசேரி கிராமத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சண்முகையா எம்எல்ஏ கலந்து கொண்டு கொடியசைத்து சாலை விரிவாக்கப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்தப் பணிகள் 3 மாத காலத்திற்குள் நிறைவுபெறும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மலர்விழி, உதவி பொறியாளர் ரஞ்சித் குமார், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி, நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் இசக்கி ராஜா, விஏஓ சொர்ணலட்சுமி, ஒப்பந்ததாரர் முத்தையா அண்ட் கோ நிறுவனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement