தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அறங்காவலர் குழு பொறுப்பேற்பு

கோவில்பட்டி, டிச. 9: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலின் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பதவி காலம், கடந்த செப்.7ம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பின்னர் கடந்த 3 மாதங்களாக அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக ராஜகுரு, திருப்பதி ராஜா, சண்முகராஜ், ரவீந்திரன், நிருத்திய லட்சுமி ஆகியோர் அறநிலையத்துறையினரால் நியமனம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கான தேர்தல் மற்றும் பதவியேற்பு விழா, கோயில் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி முன்னிலையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 5 உறுப்பினர்களும் பதவியேற்று கொண்டனர். பின்னர் அவர்கள் 5 பேரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜகுரு வெற்றி பெற்று, அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்ற கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) பாலமுருகன், வடக்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், கோயில் தலைமை எழுத்தர் மாரியப்பன் மற்றும் கோயில் ஊழியர்கள் உள்ளிட்டோர் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அறங்காவலர் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

Advertisement