தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெடுங்குளத்தில் இருக்கைகள் இல்லாத நிழற்குடையால் பயணிகள் சிரமம்

சாத்தான்குளம், செப்.9: நெடுங்குளத்தில் பயணியர் நிழற்குடையில் இருக்கைகள் இல்லாததால் கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். சாத்தான்குளம் ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி நெடுங்குளத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அப்போதைய எம்பி நிதியில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. அந்த நிழற்குடையில் இரும்பினாலா இருக்கைகள் கொண்டு புதிய வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. நாளடைவில் இருக்கைகள் உடைந்து காணப்பட்டது. தொடர்ந்து அந்த இருக்கைகள் பராமரிக்கப்படாமல் இருந்ததால் தனித்தனியாக பெயர்ந்ததால் தற்போது அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நெடுங்குளம் பயணியர் நிழற்குடையில் எட்டு இருக்கைகள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு இருக்கை மட்டும் உள்ளது. மற்ற இருக்கைகள் இருக்க வேண்டிய இடத்தில் கம்பி மட்டும் உள்ளது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் இந்த பயணியர் நிழற்குடையில் அமர முடியாமல், அதன் அருகில் நின்று பேருந்தில் பயணித்து வருகின்றனர். நெடுங்குளம் பேருந்து நிறுத்த நிழற்குடையில் இருக்கைகள் இல்லாமல் இருப்பதால் கிராம மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். அதனால் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் இதனை கவனித்து, நெடுங்குளத்தில் இருக்கைகள் இல்லாமல் இருக்கும் பயணியர் நிழற்குடையை சீரமைத்து இருக்கைகள் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement