தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அமோனியா வாயு வெளியேறிய சம்பவம் தனியார் ஐஸ் கம்பெனி உரிமையாளர் மீது வழக்கு

தூத்துக்குடி,ஆக.8: தூத்துக்குடியில் தனியார் ஐஸ் கம்பெனியில் அமோனியா வாயு வெளியேறிய சம்பவம் தொடர்பாக அதன் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி குரூஸ்புரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான ஐஸ் பிளாண்ட், ஜான் சேவியர், நகர் மீனவர் காலனி பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஐஸ் ஆலையில் முறையாக பராமரிப்பு செய்யப்படாத காரணத்தினால் அடிக்கடி அம்மோனியா வாயு வெளியேறி அந்தப் பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆக. 5ம்தேதியன்று இரவு அந்த ஆலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறியுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு மூச்சு தினறல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பலருக்கு கண் எரிச்சல், தொண்டை எரிச்சல், லேசான மூச்சுதிணறல், வாந்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்து மக்கள் இரவோடு இரவாக தங்களது உறவினர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்றுள்ளனர். தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அம்மோனியா வாயு பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இது குறித்து ஐஸ்பிளாண்ட் உரிமையாளரான ஒயிட் என்பவர் மீது அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் இருந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related News