தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விளாத்திகுளம் அருகே வீட்டில் பிரிட்ஜ் வெடித்து ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்

விளாத்திகுளம், டிச. 7: விளாத்திகுளம் அருகே தொழிலாளி வீட்டில் பிரிட்ஜ் வெடித்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் நடுத்தெருவை சேர்ந்த தம்பதியினர் சின்னமுனியசாமி- காளியம்மாள். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். கார்த்திகை தீபத்திருநாளின் 3வது நாளான நேற்று முன்தினம் இரவு, காளியம்மாள் தனது வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றும்போது குளிர்சாதனப்பெட்டி மீதும் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துள்ளார்.

Advertisement

பின்னர் வீட்டின் அருகிலுள்ள உறவினர் வீட்டிற்குச்சென்றுள்ளார். அப்போது குளிர்சாதன பெட்டியில் எரிந்த மெழுகுவர்த்தி சாய்ந்து தீப்பிடித்து, குளிர்சாதன பெட்டி முழுவதுமாக தீப்பற்றி பயங்கர சத்தத்துடன் வெடித்ததுள்ளது. தொடர்ந்து மற்ற மின்சாதன பொருட்களுக்கும் தீ பரவி எரிந்துள்ளது. சத்தம் கேட்டு வந்த காளியம்மாள், வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது வீட்டில் இருந்த மேசை, மிக்சி, பீரோ, கிரைண்டர் மற்றும் சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களும் எரிந்து சேதமானது தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement