தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்செந்தூரில் முழுமையாக சேதமடைந்த சாலை

திருச்செந்தூர், டிச. 7: திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட மேலரதவீதி சாலை முழுவதும் சேதமடைந்து போக்குவரத்து லாயக்கற்றதாகி உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சிரமமடைந்து வருகின்றனர். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நகராட்சிக்குட்பட்ட 4 ரதவீதிகள் வழியாக பக்தர்கள் நடந்தும், வாகனங்களிலும் வந்து செல்கின்றனர். மேலும் உள்தெருக்களில் உள்ளவர்கள் ரதவீதிகளை கடந்தே நகருக்கு வெளியே செல்கின்றனர். இதனால் ரதவீதிகளில் எப்போதுமே வாகன நெருக்கடி மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்துள்ளது. இதில் வடக்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி ஆகியன நகராட்சி சாலை என்பதால் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்ட் சாலை திடமாக உள்ளது. ஆனால் மேலரதவீதி சாலையானது, தூத்துக்குடி-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையாக உள்ளதால் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்ட் ரோடு தற்போது முழு அளவில் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஆங்காங்கே பள்ளம், மேடுகளாகவும், குண்டும், குழியுமாகவும் மாறிவிட்டது.

Advertisement

மழை காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள், பாதசாரிகளையும் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளையும் தடுக்கி விழச் செய்கிறது. மேலும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வழக்கமாக தெப்பக்குளத்தில் நீராடி, இங்குள்ள அரசாழ்வார் விநாயகர் கோயிலில் இருந்து நேர்த்திக்கடனாக காவடி, பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள் மற்றும் கன்னியாகுமரி, நாகர்கோவில் வழியாக பாதயாத்திரை வரும் பக்தர்கள் பழுதான மேலரதவீதி மற்றும் தெப்பக்குளம் சாலையில் அதிக சிரமமடைகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் முழு அளவில் சேதமடைந்த மேலரதவீதி மற்றும் தெப்பக்குளம் தெரு சாலையை புதிதாக அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement