தூத்துக்குடியில் ஓடும் காரில் தீ
தூத்துக்குடி, ஆக 7:தூத்துக்குடியைச் சேர்ந்த பாலசங்கரி என்பவர் நேற்று இரவு, தனது தாயை பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அவர் டபிள்யூ.ஜி.சி ரோட்டில் சென்றபோது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியது. தொடர்ந்து காரில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் பதற்றமடைந்த அவர் காரை நிறுத்திவிட்டு இறங்கினார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து மத்தியபாகம் போலீசார் விசாரித்தனர். மின்வயரில் ஏற்பட்ட உராய்வால் தீயால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. முத்தாரம்மன் கோயில் கொடை விழாவில் பாஜவினர் நீர்மோர் வழங்கல் உடன்குடி, ஆக.7: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் கொடை விழாவில் பக்தர்களுக்கு பாஜவினர் நீர் மோர் வழங்கினர். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் ஆடிக்கொடை விழா கடந்த ஆகஸ்ட் 4ம்தேதி துவங்கி ஆகஸ்ட் 6ம்தேதி வரை மூன்று நாட்கள் விமரிசையாக தொடர்ந்து நடந்தது. இதையொட்டி பாஜவினர் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நீர், மோர், குளிர்பானங்கள் வழங்கினர். இதில் உடன்குடி ஒன்றிய பாஜ முன்னாள் தலைவர் அழகேசன், முன்னாள் நிர்வாகிகள் சின்னத்துரை, அரிகிருஷ்ணன், சிவகுமார், தமிழ்செல்வி, ஜயப்பன், முருகன், வைகுண்டராமன், பத்மாவதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஹரிஹரபுத்திரன், குருசாமி ஆகியோர் செய்திருந்தனர்.