தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குரும்பூர் பகுதியில் பூ கட்ட பயன்படும் சம்பு நாரை வெட்டி எடுக்கும் வியாபாரிகள்

உடன்குடி, டிச. 6: திருநெல்வேலி, தூத்துக்குடி நாகர்கோவில், தோவாளை உள்ளிட்ட பகுதிகளில் பெரிய பூ மார்க்கெட்டுகள் உள்ளன. பூ கட்டுவதற்கு பயன்படும் சம்பு என்ற நார், கழிவுநீர்கள் செல்லும் ஓடை, வடிகால் வாய்க்கால்கள் என ஆங்காங்கே ஆள் உயரத்திற்கு அதிகளவில் வளர்ந்துள்ளது. தற்போது பருவமழை பெய்துள்ளதால் சம்பு நார்களின் வளர்ச்சி பெரியளவில் உள்ளது. இதையடுத்து நாகர்கோவில் பகுதியில் உள்ள வியாபாரிகள், தொழிலாளிகள் உள்ளிட்டோர் குரும்பூர் பகுதியில் முகாமிட்டு லோடு ஆட்டோ, லாரிகளில் சம்பு நாரை ஏற்றிச் செல்கின்றனர். இங்கிருந்து கொண்டு செல்லப்படும் சம்பு நாரை பக்குவப்படுத்தி காய வைத்து பின்னர் நாராக விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

Advertisement

இதுகுறித்து நாகர்கோவிலை சேர்ந்த தொழிலாளி யாசின் கூறுகையில், பூ கட்டும் நாறுக்கு பயன்படும் சம்பு என்ற செடி தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகளவில் கிடைத்தாலும் இங்கு சீசன் இல்லாத நாட்களில் திண்டுக்கல், மதுரை, திருச்சி என பல்வேறு பகுதிகளுக்கு சென்று தங்கியிருந்து அதனை வெட்டி எடுத்து விற்பனைக்காக கொண்டு செல்வோம். இதுதான் எங்களுக்கு தொழில். நாங்கள் 5 பேர் உள்ளோம். ஒரு லோடு கொண்டு சென்றால் ஆளுக்கு ரூ.800 முதல் ரூ.1000 ரூபாய் வரை கிடைக்கும், என்றார்.

Advertisement