தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகம்பட்டி, கே.துரைச்சாமிபுரத்தில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு

ஓட்டப்பிடாரம், நவ. 5: நாகம்பட்டி, கே.துரைச்சாமிபுரம் ஆகிய கிராமங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் குறித்து மார்க்கண்டேயன் எம்எல்ஏ அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், மீனாட்சிபுரம் ஊராட்சி, கே.துரைச்சாமிபுரம் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளின் பேரில் பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்கவும், பேவர்பிளாக் சாலை மற்றும் சிமெண்ட் சாலை, சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட கிராம மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து மார்க்கண்டேயன் எம்எல்ஏ நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

தொடர்ந்து பசுவந்தனையை அடுத்த நாகம்பட்டி கிராமத்திலும் ஆய்வு செய்தார். அப்போது கிராம மக்கள், ஒட்டுமொத்தமாக சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் தங்கள் கிராமத்திற்கு தேவையான அளவிற்கு குடிநீர் கிடைப்பதில்லை என முறையிட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசி சீரான குடிநீர் விநியோகம் வழங்கிட அறிவுறுத்தினார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் காசிவிஸ்வநாதன், எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முத்துக்குமார், வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி முத்துராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பாலமுருகன், இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement