தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தூத்துக்குடி ரவுடி கொலை வழக்கில் 6 பேரை காவலில் எடுத்து விசாரணை

சேலம், ஆக. 5: தூத்துக்குடி அந்தோணிபுரத்தை சேர்ந்தவர் மதன்குமார். பிரபல ரவுடியான இவர் சேலத்தில் கடந்த 15ம் தேதி மனைவியுடன் ஓட்டலில் சாப்பிட சென்றபோது எதிர்கோஷ்டியை சேர்ந்த பிஸ்டல் (எ) ஹரிபிரசாத் தலைமை யில் அங்கு வந்த கும்பலை சேர்ந்தவர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 13 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து 3 பைக்கில் கொலையாளிகள் சேலத்திற்கு வந்துள்ளனர். அந்த பைக்குகளை பறிமுதல் செய்வதற்காக இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையிலான தனிப்படையினர் நடவடிக்கை எடுத்தனர். கொலை சம்பவம் நடந்தபோது முதலில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்தனர்.இதையடுத்து ரவுடி பிஸ்டல் ஹரிபிரசாத், அந்தோணி(எ) வல்லரசு, ஜெயசூரியா, சந்தோஷ், ஆனந்தகுமார் மற்றும் 17 வயது சிறுவன் என 6 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த சேலம் 3வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் காந்திமதி மனு தாக்கல் செய்தார். இதற்காக அவர்களை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். இவர்களிடம் 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதித்துறை நடுவர் அனுமதி வழங்கினார். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.