தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் லிப்ட் வசதி

திருச்செந்தூர், ஜன. 4: திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் லிப்ட் வசதி செய்யப்பட்டு உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். பிரசித்திப் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்காக திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை, திருநெல்வேலி, பாலக்காடு மார்க்கமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

Advertisement

தற்போது திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தில் ₹8.16 கோடி செலவில் வளர்ச்சி மற்றும் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதலாவது நடைமேடையில் இருந்து 2வது நடைமேடைக்கு செல்வதற்கு மின் தூக்கி (லிப்ட்) வசதி செய்யப்பட்டுள்ளது. பயணிகள் பயன்பாட்டிற்காக இந்த மின் தூக்கி தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய ரயில் இருப்புபாதையாக உள்ள நமது நாட்டில் வடக்கே காஷ்மீரில் தொடங்கி தெற்கே கடற்கரை நகரங்களான ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரிலேயே ரயில் பாதைகள் முடிவடைகிறது. இந்த 4 நகரங்களும் முக்கிய சுற்றுலா மற்றும் தொழில் நகரங்களாக விளங்குகின்றன. எனவே மற்ற 3 ரயில் நிலையங்களில் உள்ளதுபோல கோயில் நகரான திருச்செந்தூர் ரயில் நிலையத்திலும் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென பயணிகள் மற்றும் பக்தர்கள் தெற்கு ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement

Related News