தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மன்னார்குடியில் பூட்டி கிடந்த வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி

மன்னார்குடி, அக். 31: மன்னார்குடி நியூ பைபாஸ் ரோடு ஞானம் நகரை சேர்ந்தவர் ரெங்கநாதன் (75). பள்ளிக்கல்வி துறையில் பணியா ற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் கலைமணி கணவருடன் சிங்கப்பூரில் வசித்து வருவதால் மதுக்கூர் சாலை சாந்தி குருதேவ் நகரில் உள்ள அவரது வீடு கடந்த சில மாதங்களாக பூட்டி கிடக்கிறது. ரெங்கநாதன் அவ்வப் போது அந்த வீட்டிற்கு சென்று சுத்தம் செய்து வருவாராம்.

Advertisement

இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை மகள் வீட்டை சுத்தம் செய்ய ரெங்கநாதன் வந்தார். அப்போது வீட் டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப் பட்டிருந்தது. திடுக்கிட்ட அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அதுகுறித்து மன்னார்குடி நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், டவுன் எஸ்ஐ சங்கவை, தனிப்பிரிவு கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசரணை நடத்தினர். அதில், வீடு நீண்ட நாட்களாக பூட்டி இருப்பதை பார்த்த மர்ம நபர்கள் சிலர் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டதும், வீட்டில் நகை மற்றும் பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News