தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அஞ்சல் துறையில் காலியிடங்களை நிரப்ப கோரி வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகை போராட்டம்

திருத்துறைப்பூண்டி,நவ.22: ரயில்வே, அஞ்சல் துறையில் காலியிடங்களை ஒன்றிய அரசு நிரப்ப கோரி வேலைவாய்ப்பு அலுவலகத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வரும் 25ம்தேதி முற்றுகை போராட்டம் நடத்துகிறது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் திருவாரூர் மாவட்ட தலைவர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் சரவணன் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தையும் உடனே நிரப்பிட வேண்டும், தமிழ்நாட்டில் காலியாக உள்ள ரயில்வே, அஞ்சல் துறை உள்ளிட்ட ஒன்றிய அரசு காலிப்பணியிடங்களை தமிழ்நாட்டு இளைஞர்களை மட்டுமே நிரப்பிட வேண்டும், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பில் தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கிட வேண்டும்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பட்டியல் எழுத்தர், உதவியாளர் மற்றும் காவலர் உள்ளிட்ட (தற்காலிக) பணியிடங்களை மாநில அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பிட வேண்டும், வருவாய்துறையில் கிராம உதவியாளர், சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் அமைப்பாளர்,

உதவியாளர் மற்றும் சமையலர் பணியிடங்களுக்கு பணம் வாங்காமல் தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி வரும் 25ம் தேதி திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement

Related News