தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முத்துப்பேட்டை அருகே ஓவரூரில் விபத்தை ஏற்படுத்தும் பெயர்த்த சாலை கழிவுகள்

முத்துப்பேட்டை,ஆக.21: முத்துப்பேட்டை அருகே கிழக்கு கடற்கரை சாலை ஓவரூர் பேருந்து நிறுத்தத்ததில் சாலை ஓர துகள்களால் விபத்து ஏற்படுகிறது. இதை உடனடியாக சரி செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கோட்டகம் ஓவரூர் பேரூந்து நிறுத்தம் என்பது கிழக்கு கடற்கரை சாலை முத்துப்பேட்டை - திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், விவசாயிகள், தொலைதூரம் பயணங்கள் மேற்கொள்ள சென்று வருகின்றனர்.

Advertisement

இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேரூந்து நிறுத்தத்தில் அப்பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை சீரமைப்பு செய்யும் பணியில் பெயர்த்து எடுக்கப்பட்ட சாலை துகள்களை இந்த இடத்தில் கொட்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறாக கொட்டப்பட்ட இந்த துகள்கள் முறையாக பரப்பி சமப்படுத்தி சரி செய்யாததால் தற்போது பேரூந்து ஏறவரும் மக்களும் இறங்க வரும் மக்களும் தினந்தோறும் கால் தடுமாறி விழுந்து பாதிக்கப்பட்டு குறிப்பாக முதியோர்கள் பெண்கள் சிறுவர்கள் அதிகளவில் பாதிப்பு அடைந்து வருகின்றனர். எனவே இங்கு வரும் மக்கள் நலன் கருதி இந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கவனத்தில்கொண்டு இங்கு கொட்டப்பட்ட சாலை துகள்களை சரி செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

Related News