தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாரூரில் 2 வது நாளாக சாரல் மழை

 

Advertisement

திருவாரூர், நவ. 18: திருவாரூர் மாவட்டத்தில் நேற்றும் 2வது நாளாக காலை முதல் மாலை வரையில் விட்டுவிட்டு பெய்த சாரல் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையையொட்டி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட தலைநகரான திருவாரூர் உட்பட மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரையில் விட்டுவிட்டு சாரல் மழையாக பெய்தது. இந்நிலையில் 2வது நாளாக நேற்றும் காலை முதல் மாலை வரையில் விட்டுவிட்டு சாரல் மழையானது பெய்தது.

இதன்காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லு£ரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்களும் பாதிப்பிற்குள்ளாகினர். மேலும் குளிர்ந்த காற்று வீசிகொண்டே இருந்ததால் கடும் குளிர் காரணமாகவும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த மழையானது சம்பா சாகுபடியில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உகந்ததாக இருந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் பெய்த மழையளவு மி.மீ வருமாறு, திருவாரூர் 12, நன்னிலம் 3.1, மன்னார்குடி 7, பாண்டவையாறுதலைப்பு 1.4, திருத்றைப்பூண்டி 13.2, முத்துப்பேட்டை 12.2 என மொத்தம் 48.9 மி.மீ மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.

Advertisement

Related News