தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்டிமேடு அரசு பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

 

Advertisement

திருத்துறைப்பூண்டி, அக். 14: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரு கே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை வெற்றிப்படிகள் என்ற அரசு திட்டத்தின் மூலம் மாணவர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகவும் தேர்வுகளை பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்காகவும் கருத்தரங்கம் நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் மு.ச.பாலு தலைமை வகித்தார்.முன்னதாக ஆசிரியை மாலதி வரவேற்றார். வெற்றி பள்ளிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரசிகா பேசும்போது: நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ நுழைவுத்தேர்வு பற்றி மாணவர்களுக்கு விளக்கினார். ஜேஇஇ தேர்வு இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்களின் கணித பாட அறிவுத்திறனை சோதிப்பதற்கு உரிய தேர்வாகும். தமிழ்நாட்டில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் ஐஐடி, என்ஐடி, தேசிய சட்டப் பள்ளி, மத்திய பல்கலைக்கழகம் போன்றவற்றில் நுழைவுத் தேர்வு மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதை பற்றி விளக்கினார். நிகழ்ச்சியை ஆசிரியை தனுஜா தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியை ரேணுகா நன்றி கூறினார்.

Advertisement