தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் சாலை மறியல்

திருவாரூர், நவ. 13: கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் 90 பேர் கைது செய்யப்பட்டனர். அலுவலக உதவியாளருக்கு இணையான கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் கிராம உதவியாளர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்,

Advertisement

கிராம நிர்வாக அலுவலர்பணியிடத்திற்கு பதவி உயர்வு பெறுவதற்கு 10 ஆண்டு நிறைவு செய்திருக்க வேண்டும் என்பதை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், வருவாய்த்துறையில் ஏற்படும் காலி பணியிடங்களில் 50 சதவித பணியிடத்தினை கிராம உதவியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்,

இறந்த மற்றும் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை தாலுகா போலீசார் கைது செய்து காட்டூரில் இருந்து வரும் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்து பின்னர் விடுவித்தனர்.

 

Advertisement