தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஸ் டேங்கர் லாரி உரிமையாளர் வேலை நிறுத்த போராட்டம்

பொன்னேரி: நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், தென் மண்டல எல்பிஜி காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் சுமார் 5,000 காஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் எரிவாயு முனையத்தில் இருந்து எரிவாயுவை சிலிண்டர் நிரப்பும் ஆலைகளுக்கு விநியோகம் செய்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் வாடகை ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தில் பல்வேறு கெடுபிடிகள் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனை கண்டித்து கடந்த வியாழக்கிழமை முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாய் முனையத்திலிருந்து நாள்தோறும் 150க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் எரிவாயு நிரப்பும் ஆலைகளுக்கு எரிவாயு கொண்டு செல்லும் பணிகள் முடங்கியுள்ளன. எல்பிஜி முனையத்திலேயே 100க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டு வேலை நிறுத்த போராட்டம் நீடித்து வருவதால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Advertisement