தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு

திருத்துறைப்பூண்டி, அக்.12: தமிழ் மொழி இலக்கியத் திறனையும் மாணவர்களிடம் மேம்படுத்தும் வகையில், ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறிவு தேர்வு’ தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம் நடத்தப்படுகிறது. இத்தேர்வு வருடத்திற்கு ஒரு முறை தமிழக அளவில் அக்டோபர் மாதம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 2025-26 கல்வி ஆண்டுக்கான தேர்வு நேற்று தொடங்கியது. திருவாரூர் மாவட்டத்தில் 19 பள்ளிகளில் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை 5 ஆயிரத்து 331 மாணவர்கள் எழுதுகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மொத்தம் 1046 மாணவர்கள் தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வானது 12 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய், 12ம் வகுப்பு வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வை எழுதினர்.

Advertisement

Advertisement