தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோட்டூர் ஒன்றியத்தில் நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல்

 

Advertisement

மன்னார்குடி, அக்.10:கோட்டூர் ஒன்றியத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல் அதிக மாக காணப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுப்பட்டனர். பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், பல கிராமங்களில் புகையான் நோயால் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பாதிப்பு பொருளாதார சேத நிலையை விட அதிகமாக உள்ளது.

ஏற்கனவே விவசாயிகள் இந்த ஆண்டு சாகுபடிக்கு அதிக அளவு செலவு செய்துள்ள நிலையில் தற்போது புகையான் நோய் தாக்குதலால் பெரியளவில் மகசூல் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

இதுகுறித்து காரியமங்கலம் பகுதி விவசாயிகள் கூறுகையில், வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாக புகையான் நோய் தாக்கியுள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனை களை வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கோட்டூர் ஒன்றியத்திற்கு என நிரந்தரமாக வேளாண் உதவி இயக்குனரை உடன் நியமிக்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றனர்.

Advertisement