தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கொரடாச்சேரி அருகே விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்யக் கோரி சாலை மறியல்

நீடாமங்கலம். ஆக.9: கொரடாச்சேரி அருகே கீழ முகுந்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசாமி மகன் பால முருகன்(45) இவர் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் பைக்கில் வந்த நபர் மோதி விபத்துக்குள்ளாக்கியதில் பலத்த காயம் அடைந்த பாலமுருகன் திருவாரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாலமுருகன் இறந்துவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக கொரடாச்சேரி போலீசில் சி.சி.டி.வி. புட்டேஜுன் புகார் கொடுத்து இரண்டு நாட்களுக்கு மேலாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து கீழ முகுந்தனூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தஞ்சாவூர்- திருவாரூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனை அறிந்த திருவாரூர் போலீஸ் டிஎஸ்பி மற்றும் வருவாய்த் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விபத்து ஏற்படுத்திய நபரை விரைவில் கைது செய்து விடுவோம் என உறுதிகூறியதன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

 

Related News