தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மன்னார்குடி அருகே கோட்டூரில் அரசு - தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

மன்னார்குடி, டிச. 8: மன்னார்குடி அருகே கோட்டூரில் அரசு பஸ்சும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தாசில்தார் மனைவி உள்பட 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி நேற்று பிற்பகல் தனியார் பஸ் புறப்பட்டது. தாணிக் கோட்டகம் கிராமத்தை சேர்ந்த ஜான் கிறிஸ்டோபர்(29) பஸ்சை ஓட்டினார். அதுபோல், திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த அரசு பஸ்சை மகேந்திர மணி(38) என்பவர் ஓட்டி வந்தார்.

Advertisement

கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இரண்டு பஸ்களும் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் கூத்தாநல்லூர் தனி தாசில்தார் நக்கீரனின் மனைவியும், மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வரும் தீபா(45), மன்னார்குடியை சேர்ந்த சத்யா(27) உள்பட 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி இடையே 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News