தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் கோவில்வெண்ணியில் செயல் விளக்க முகாம்

நீடாமங்கலம், நவ. 27: நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் கோவில்வெண்ணி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயோபொட்டாஷ் உரம் நன்மை குறித்த செயல் விளக்கம் முகாம் நடைபெற்றது. பயிருக்கு 16 வகையான ஊட்டச் சத்துக்கள் தேவைப்படுகிறது. இதில் சாம்பல் சத்து விளைச்சலைப் பெருக்கவும், பூச்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது. சாம்பல் சத்துக்காக பொட்டாஷ் உரம் வெளிநாடுகளிலிருந்து, ரசாயன உரமாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கழிவிலிருந்து பொட்டாஷ் உரம் பிரித்தெடுக்கப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்படுவது பயோ பொட்டாஷ் உரம் ஆகும். பயோ பொட்டாஷ் உரம் பற்றி கோவில்வெண்ணி கிராம விவசாயிகளுக்கு, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நெல் வயலில் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.

Advertisement

அப்போது சுற்றுச்சூழல் அறிவியல் துறையை சேர்ந்த பிரபாகரன் விவசாயிகளிடம் விளக்கி கூறும்போது, பொட்டாஷ் உரம் என்பது தாவரங்களின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. இது சாம்பல் சத்தை வழங்கும் ஒரு வகை உரமாகும். இது பயிர்களின் நோய் எதிர்ப்பு சக்தி, புரதம், வைட்டமின் சி மற்றும் மாவுச்சத்து உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

விவசாயிகள் பொட்டாசியம் குளோரைடு அல்லது பொட்டாசியம் சல்பேட் ரசாயன உரங்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் செலவு அதிகரிக்கிறது. உயிர்-பொட்டாஷ் அல்லது பயோ பொட்டாஷ் தாவரப் பொருட்கள் மற்றும் கால்நடை கழிவுகள் போன்ற இயற்கை ஆதாரங்களில் இருந்து பெறப்படும் ஒரு இயற்கை உரம் ஆகும். இதில் 16 சதம் பொட்டாசியம் சத்து பயிருக்கு எளிதில் கிடைக்கும்படி இருக்கிறது.

உயிர் பொட்டாஷ் இடுவதால் மண்ணில் இயற்கையாக உள்ள கரையாத பொட்டாஷ் சேர்மங்களை கரைத்து, தாவரங்களால் உறிஞ்சப்படும் வடிவத்திற்கு மாற்றப்படுகிறது. மேலும் உயிர் பொட்டாஷ் இடுவதால் இரசாயன பொட்டாஷ் உரத்தின் தேவையை சுமார் 50-60 சதம் குறைக்கலாம். நெல் தானியங்கள் அதிக எடையுடன் காணப்படும். இது ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை என்ற அளவில் சாதாரண ரசாயன பொட்டாஷ் உரம் போலவே இடலாம்.

ஒரு மூட்டை சுமார் ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை போட்டால் போதும். இதை அனைத்து பயிர்களுக்கும் இடலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்த செயல் விளக்க முகாம் காரணமாக ஏராளமான விவசாயிகள் பயனடைந்தனர்.

Advertisement