தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேளாண் இயந்திரங்கள் ஓட்டுநர் பயிற்சி

திருவாரூர், டிச.11: திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் கீழ் வேளாண் இயந்திரங்கள் ஓட்டுநர் பயிற்சி பெறுவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

திருவாரூர் பவித்திரமாணிக்கத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் கீழ் இயங்கி வரும் வேளாண்மை கருவிகள் பணிமனையில் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம் மூலம் இளைஞர்களுக்கு வேளாண் இயந்திரங்கள் குறித்த செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி மூலம் டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம், மற்றும் ட்ரோன் உட்பட அனைத்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு முறைகள் பயிற்சி அளிக்கப்படும். மேலும் இப்பணிமனையில் அமைக்கப்பட்டுள்ள டிராக்டரின் வெட்டு தோற்ற மாதிரி மூலம் டிராக்டர் இயங்கும் முறைகள் மற்றும் பழுது நிவர்த்தி செய்யும் முறைகள் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படும்.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் 16 நாட்கள் (128 மணி நேரம்) தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொண்டு நிறைவு செய்ய வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் http://candidate.tnskill.tn.gov.in

என்ற இணையதள முகவரியில் தேவையான விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம். வேளாண் பொறியியல் துறையில் வேளாண் கருவிகள் பணிமனை அலுவலகத்திற்கு நேரில் சென்று அல்லது உதவி செயற்பொறியாளர் 6383426912, உதவிப்பொறியாளர் -7904283434, 9952877189 ஆகிய தொடர்பு எண்களை அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News