தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வழங்கிட வேண்டும்

 

Advertisement

திருவாரூர், டிச. 7: டிட்வா புயல் சின்னம் காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் நேற்று மாவட்ட தலைவர்கள் முருகையன் மற்றும் தம்புசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர்கள் ஜோசப் மற்றும் சேகர் மற்றும் பொறுப்பாளர்கள் சாமிநாதன், ஜெயபிரகாஷ், சுப்பிரமணியன், பவுன்ராஜ், சௌந்தர்ராசன், தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், டிட்வா புயலின் காரணமாக ஏற்பட்ட தொடர் மழையின் காரணமாக பெருமளவு சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருகிறது. கடந்த செப்டம்பரிலும் வடகிழக்கு பருவ மழை வெள்ள நீர் சூழ்ந்து குறுவை அறுவடை செய்ய வேண்டிய நிலையில் இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கியும் சம்பா, தாளடி இளம் பயிர்களும் பாதித்தன. தற்போது நீரில் மூழ்கிய சம்பா, தாளடி பயிர்கள் முற்றிலும் அழியும் நிலையில் உள்ளது. மேலும் மழை தொடரும் நிலையில் வயல்வெளிகள் அனைத்தும் கடல் போல் மழை நீர் தேங்கி உள்ளதால், மறு விதைப்பு மேற்கொள்ள வழிவகையும் இல்லை.

Advertisement