தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா விவரங்கள் கணக்கெடுப்பு: வீடு கட்டாவிட்டால் பட்டா ரத்தா? அவகாசம் கேட்டு பயனாளிகள் மனு

திருத்தணி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனைகள் தொடர்பான கணக்கெடுப்பு பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கடந்த 25 ஆண்டுகளில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் இருளர் சமுதாய மக்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது. இருப்பினும், பட்டா இதுவரை கணினியில் பதிவேற்றம் செய்யப்படாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பயனாளிகள் பெரும்பாலானோர் இலவச வீட்டு மனைகளில் வீடுகள் கட்டி குடியேறாத நிலையில், அவை காலி மனைகளாகவே இருந்து வருகின்றன.
Advertisement

இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் சமீபத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டம் நடத்தி முதலமைச்சரின் உத்தரவின்பேரில், தகுதியானவர்கள் அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதை உறுதிப்படுத்த கணக்கெடுப்பு பணிகள் மேற்கொண்டு விவரங்கள் சமர்பிக்க கேட்டிருந்தார். அதன்படி, மாவட்டம் முழுவதும் அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா தொடர்பான கணக்கீடு நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இலவச வீட்டுமனை பட்டா பெற்றுள்ள பயனாளிகள் வீடு கட்டிக்கொண்டு வசித்து வருகின்றனரா, காலியாக உள்ளதா போன்ற விவரங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கிராம நத்தம், பாறை புறம்போக்கு, ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வருபவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால், பல ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டுமனை பட்டா பெற்று இதுவரை வீடு கட்டாமல் காலியாக வைத்துள்ளவர்களின் பட்டா ரத்தாகும் என்று பயனாளிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். இதற்கிடையே, திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூர் உராட்சியில் 110 குடும்பங்களை சேர்ந்த ஆதிதிராவிடர்களுக்கு கடந்த 2001ல் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவில் வீடுகள் கட்டி குடியேற கால அவகாசம் தர வேண்டும் என்று வலியுறுத்தி பயனாளிகள் நேற்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.

Advertisement

Related News