தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் மழையின் காரணமாக மீண்டும் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 7000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

திருவள்ளூர், அக்.28: திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக மீண்டும் பூண்டி நீர்த்தகத்திலிருந்து 7000 கன அடியாக உயர்த்தி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் பருவ மழை தொடங்கி தொடர்ந்து கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக நீர் இருப்பு உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, கடந்த சில நாட்களாக தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது.

இந்த, மழையின் காரணமாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர் தேக்கங்கள் நிரம்பி வருகிறது. அதன்படி நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் 35 அடி மொத்த உயரத்தில் 33.11 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2553 மில்லியன் கன அடியாக உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணை, அம்மம்பள்ளி அணை, ராணிப்பேட்டை மாவட்டம் கேசவரம் அணை மற்றும் வரத்துக் கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர், மழைநீர் என வினாடிக்கு 5310 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 300 கன அடியும், பேபி கால்வாய் வழியாக 47 கன அடியும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, தற்போது மழை அளவு கூடுதலாக இருப்பதாலும், நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து கூடுதலாக இருப்பதாலும், அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை 6 மணி நிலவரப்படி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 7000 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் 24 அடி மொத்த உயரத்தில் 21.21 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2910 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 950 கன அடியாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 165 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் ஏரியிலிருந்து வினாடிக்கு 750 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

புழல் ஏரியின் 21.20 அடி மொத்த உயரத்தில் 18.33 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2674 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 209 கன அடியாக உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 184 கன அடி விதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. சோழவரம் ஏரியின் 18.86 அடி மொத்த உயரத்தில் 15.63 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 715 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 212 கன அடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியின் 36.61 அடி மொத்த உயரத்தில் 34.77 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 439 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 20 கன அடியாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 2 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு கொசஸ்தலை ஆறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Advertisement