தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பவானி அம்மன் கோயில் 35ம் ஆண்டு திருவிழா: அலகு குத்தி, பால்குடம் ஏந்தி வழிபாடு

பெரியபாளையம், செப்.26: பெரியபாளையத்தில் பவானி அம்மன் கோயில் உள்ளது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆடி மாதம் தொடங்கி 14 வாரங்கள் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆடி மாதத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாது, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களில் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில், 10வது வாரமான நேற்று முன்தினம் உள்ளூர் மக்களின் 35ம் ஆண்டு திருவிழா நடந்தது. திரவுபதி அம்மன் கோயிலில், பக்தர்கள் பால்குடங்கள் ஏந்தியும், உடலில் அழகு குத்தியும் ஊர்வலம் வந்தனர். சிலர் காவடி எடுத்தும் நேர்த்தி கடனை செலுத்தினர். கோயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ண விளக்குகளால் ஜொலித்தது. முக்கிய வீதிகளில் சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

Advertisement

Related News