தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்குன்றம் அருகே காதல் திருமணம் செய்த இளம் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

புழல், நவ.25: செங்குன்றம் அருகே காதல் திருமணம் செய்த இளம் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாகப்பட்டினம் மாவட்டம், அகரகொந்தகை கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி(27). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சி காந்திநகரை சேர்ந்த ராகுல்(30) என்பவரை காதலித்தார். இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி திருமணம் நடந்தது. இதையடுத்து, நந்தினி தனது கணவர் குடும்பத்தினருடன் காந்திநகரில், வசித்து வந்தார். நந்தினி 2 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், சரிவர உணவு உட்கொள்ளாததால் அவரது மாமியார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த நந்தினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த சோழவரம் காவல் நிலைய போலீசார் நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நந்தினியின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். திருமணமான 3 மாதத்தில் கர்ப்பிணி இறந்த நிலையில் கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 2 மாத கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement

Related News