தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீஞ்சூர் ஒன்றியத்தில் பன்றிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

பொன்னேரி, அக்.25: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள் உள்ளன. தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் மழையால், இந்த ஊராட்சிகளில் உள்ள குளங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, காலரா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட வல்லூர், அத்திப்பட்டு, கொண்டக்கரை, நாலூர், வண்ணிப்பாக்கம் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மீஞ்சூர் ஒன்றியம், வல்லூர் ஊராட்சியில் உள்ள மாந்தோப்பு காலனி பகுதி குடியிருப்பு பகுதி மற்றும் தனியார் பள்ளி அருகிலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் பன்றிகள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்துள்ளது. இதனால், அவ்வழியே தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்ல பெற்றோர் அச்சப்படுகின்றனர். மேலும், தண்ணீரில் ஊர்ந்து செல்லும் பன்றிகளால் நோய்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதிவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Related News