தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசின் கூட்டுறவு ஆணையத்தை கண்டித்து கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருத்தணி, செப்.25: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை திருவாலங்காட்டில் செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆலை சார்பில் கடந்த 1994ம் ஆண்டு தேசிய கூட்டுறவு ஆணையத்திடம் ரூ.5 கோடி கடன் பெறப்பட்டது. இதில், வட்டியுடன் ரூ.9.50 கோடி கடன் செலுத்த வேண்டும் என்று தேசிய கூட்டுறவு ஆணையம் கூறியநிலையில், தமிழ்நாடு அரசு, தேசிய கூட்டுறவு ஆணையம் இணைந்து லோக் அதாலத் மூலம் தீர்வு காணப்பட்டு ரூ.9 கோடி கடன் செலுத்தப்பட்டது.

Advertisement

இந்நிலையில், 38 கோடி கடன் செலுத்த வேண்டும், தவறும் பட்சத்தில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஜப்தி செய்யப்படும் என்ற தேசிய கூட்டுறவு ஆணையத்தின் நடவடிக்கைளை கண்டித்து, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாலங்காட்டில் உள்ள ஆலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துளசி நாராயணன், மாவட்ட பொருளாளர் பெருமாள், நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், நாபளூர் ஸ்ரீநாத் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று ஒன்றிய அரசின் கூட்டுறவு ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Related News