தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

151 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு வயது திருத்தம் செய்து விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர், செப்.24: திருவள்ளூர் மாவட்டத்தில் 151 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, வயது வரம்புரை தொடர்பாக திருத்தம் வெளியிடப்படுள்ளது. அதன்படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலகில், வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள 151 கிராம உதவியாளர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடியாக விண்ணப்பங்கள் பெற்று, பணி நியமனம் மேற்கொள்வது தொடர்பாக 23.07.2025 அன்று தினசரி நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

Advertisement

அதில், வயது வரம்பு தொடர்பாக கீழ்கண்டவாறு திருத்தம் வெளியிடப்படுகிறது.

1.07.2025 அன்று பொதுப்பிரிவினர் 32 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 37 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதரவற்ற விதவையினர் 39 வயதுக்குள்ளும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் ஆதரவற்ற விதவையினர் 42 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இதனை, தவிர வேறு திருத்தங்கள் ஏதுமில்லை. திருத்தத்திற்கு பிறகு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து 151 கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பத்தினை https://tiruvallur.nic.in/ என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து 8.10.2025 வரை மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைத்து பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement