தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரியபாளையம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் கொக்கி போட்டு மின்சாரம் திருட்டு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை, செப்.24: பெரியபாளையம் அருகே அத்தங்கிகாவனூர் கிராமத்தில் இ-சேவை மையத்தில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையத்தில் கொக்கி போட்டு மின்சாரம் திருடப்படுவதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

Advertisement

பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம், அத்தங்கிகாவனூர் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வசதிக்காக இ-சேவை மையம் கட்டப்பட்டது. இந்த, இ-சேவை மைய கட்டிடம் பயன்படாத நிலையில், அதை விவசாயிகள் பயன்படுத்த நெல் கொள்முதல் நிலையமாக மாற்றப்பட்டது.

இந்த, நெல் கொள்முதல் நிலையத்தினை கூரம்பாக்கம், கோட்டைகுப்பம், மஞ்சங்காரணை, அத்திவாக்கம், ஆமிதாநல்லூர், ஆலப்பாக்கம், மாம்பள்ளம், அத்திவாக்கம், வெங்கல், நெய்வேலி பெருமுடிவாக்கம் என 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் இங்கு செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் தரம் பிரிக்கும் இயந்திரத்திற்கு அங்குள்ள ஊழியர்கள் கொக்கி போட்டு மின்சாரம் திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைக்கையை ஏற்று, அத்தங்கிகாவனூர் கிராமத்தில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் கட்ட வேண்டும், நெல் கொள்முதல் நிலையத்தில் கொக்கி போட்டு மின்சாரம் திருடப்படுவதால், புதிதாக நெல் கொள்முதல் நிலையம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News