தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளிப்பட்டு அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து நெல் மூட்டைகள் விற்பனை ? டிராக்டர் வருகையால் பரபரப்பு; காவல் நிலையத்தில் புகார்

பள்ளிப்பட்டு,செப்.23: பள்ளிப்பட்டு அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், ஆந்திர பதிவு எண் கொண்ட டிராக்டரில் நெல் மூட்டைகள் தார்ப்பாய் போட்டு மூடிவைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆந்திர மாநிலத்தில் இருந்து நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் சொர்ணவாரி பட்டத்திற்கான நெல் அறுவடை செய்து விவசாயிகள் முன்பதிவு செய்து தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர்.

Advertisement

இந்தநிலையில் ஆந்திர எல்லைப் பகுதியில் இருந்து நெல் மூட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி விவசாயிகள் என்ற போர்வையில், சில சமூக விரோதிகள் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், பள்ளிப்பட்டு அருகே பொம்மராஜுபேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் கடந்த 3 நாட்களாக தேங்கியுள்ளன. விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை வாங்கி பாதுகாப்பாக வைக்க இட வசதி இல்லாததால், நேற்று நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் கடந்த 3 நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை டிராக்டர்களில் தார்ப்பாய் மூடி விவசாயிகள் விற்பனைக்காக காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் நேற்று காலை ஆந்திர பதிவு எண் கொண்ட டிராக்டரில் நெல் மூட்டைகள் தார்ப்பாய் போட்டு மூடிவைக்கப்பட்டிருந்ததை பார்த்த பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரவீந்திரா மற்றும் விவசாயிகள் ஆந்திர பதிவு எண் கொண்ட டிராக்டர் யாருடையது, எங்கிருந்து வந்தது என்று நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் விசாரித்தனர். அதற்கு எங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் கூறிவிட்டனர். இதனால் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு வழங்கப்பட்டது. அம்மனுவில் பொம்மராஜுபேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் மூட்டைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆந்திர பதிவு எண் கொண்ட டிராக்டர் எங்கிருந்து வந்தது? அது யாருடையது என விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆந்திர பதிவு எண் கொண்ட டிராக்டரில் நெல் மூட்டைகள் இருந்ததால் அப்பகுதி விவசாயிகளுக்கு இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement