தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செம்பரம்பாக்கம் அரசு பள்ளிகளில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் விழிப்புணர்வு

திருவள்ளூர், நவ.22: செம்பரம்பாக்கம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு புகையிலை இல்லா இளைய சமுதாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பூந்தமல்லி பொது சுகாதாரம், நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட செம்பரம்பாக்கம், அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளிகளில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் 3.0 விழிப்புணர்வு பேரணி மாவட்ட சுகாதார அலுவலர் பிரபாகரன் உத்தரவின்பேரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் பிரிதிபா தலைமை தாங்கினார். மாவட்ட மலேரியா அலுவலர் (பொ) ஆனந்த், பள்ளிகளின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியர் கிறிஸ்டி சாராள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மருத்துவ மேற்பார்வையாளர் கோடீஸ்வரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (பொ) விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் லோகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களுக்கு புகை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறினர். முன்னதாக, இராமச்சந்திரா செவிலியர் கல்லூரியின் இணை பேராசிரியர் பூங்கொடி தலைமையில், செவிலியர் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பின்னர், அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Advertisement

Advertisement