தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழவேற்காடு கடற்கரை பகுதிகளில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை: இன்று மாலை வரை நடைபெறுகிறது

பொன்னேரி, நவ.21: பொன்னேரி அடுத்த, பழவேற்காடு கடற்கரை பகுதிகளில் சாகர் கவாச் தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் கூட்டு பயிற்சியான சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை தொடங்கியது. இந்த பாதுகாப்பு ஒத்திைக நிகழ்ச்சி இன்று மாலை வரை நடைபெறுகிறது. சாகர் கவாச் என்பது இந்தியாவின் கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படும் ஒரு கூட்டுப் பாதுகாப்புப் பயிற்சி ஒத்திகை ஆகும். இது இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் மாநில போலீஸ் போன்ற பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சியாகும். இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கம் கடலோரப் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதாகும்.

Advertisement

அதன்படி, இந்த ஆண்டுக்கான சாகர் கவாச் கூட்டுப் பயிற்சி நேற்று காலை தொடங்கியது. இன்று மாலை வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாகர் கவாச் தொடங்கிய நிலையில் பழவேற்காட்டில் காவல் உதவி ஆணையர் சங்கர் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பழவேற்காட்டில் கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் கண்காணிப்பு பணியில் ஈடுபடக்கூடிய இடங்களான போலாச்சி அம்மன் குளம் செக் போஸ்ட், ஆண்டார் மடம் பேருந்து நிலையம், பழவேற்காடு புற காவல் நிலையம், லைட் ஹவுஸ் கடற்கரை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று, தமிழ்நாடு கடலோர காவல்படை சார்பில் ஆய்வாளர் சபாபதி தலைமையிலான குழுவினர் காட்டுப்பள்ளி துறைமுக பகுதி மற்றும் பழவேற்காடு கடற்கரை பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ் உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.

Advertisement

Related News