தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரியபாளையம் அருகே ரூ.5 கோடியில் புதிய பாலப்பணி விறுவிறு

ஊத்துக்கோட்டை, ஆக.21: பெரியபாளையம் அருகே, எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள ஆரிக்கம்பேடு கிராமத்தில் விவசாயிகள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் செங்குன்றம்-திருவள்ளூர் சாலையில் உள்ள பூச்சி அத்திப்பேடு பகுதிக்குச் சென்று அங்கிருந்து திருவள்ளூர், ஆவடி, சென்னை, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். இதற்காக ஆரிக்கம்பேடு பகுதியிலிருந்து இணைப்பு சாலை வழியாக ஏரிக்கால்வாயில் இறங்கி செல்வார்கள்.

Advertisement

இதனால், இப்பகுதி மக்கள் ஆரிக்கம்பேட்டில் இருந்து பூச்சி அத்திப்பேட்டிற்கு இணைப்பு சாலையும், அங்கு செல்லும் ஏரிக்கால்வாயின் குறுக்கே பாலமும் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி, கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பாலமும், இணைப்பு தார்சாலையும் போடப்பட்டது. இந்நிலையில், கொசஸ்தலை ஆற்றின் அருகில் இருந்த பழைய பாலம் கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலால் சேதமடைந்து உடைந்தது. இதனையடுத்து, புதிய பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, ஆரிக்கப்பேடு கொசஸ்தலை ஆற்றின் அருகில் உடைந்த பாலத்தை அகற்றிவிட்டு ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய பாலத்தின் கட்டுமான பணி தொடங்கப்பட்டு, இதுவரை 50 சதவீத பணிகள் நிறைவுபெற்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Advertisement

Related News