தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாதாள சாக்கடை பணிக்கு எதிர்ப்பு 2வது நாளாக சாலை மறியல் 100க்கும் மேற்பட்டோர் கைது: பொன்னேரி அருகே பரபரப்பு

பொன்னேரி, ஆக.20: பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் கடந்த 2019ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் ஆரணி ஆற்றில் தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஆற்றில் தண்ணீரை வெளியேற்ற பொதுமக்கள் நேற்று முன்தினம் எதிர்ப்பு தெரிவித்தனர். 2வது நாளாக நேற்று சின்னக்காவனம் கூட்டுச்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கழிவுநீரை ஆற்றில் வெளியேற்றுவதால் கால்நடைகள் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் குடிநீர் மாசடைந்து நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.

Advertisement

2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் தரதரவென இழுத்துச்சென்று பேருந்தில் ஏற்றி கைது செய்தனர். ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்த நிலையில் பெண்கள், ஆண்கள் என பாரபட்சமின்றி குண்டு கட்டாக தூக்கிச் சென்று 100க்கும் மேற்பட்டோரை பேருந்துகளில் ஏற்றி திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு 2வது நாளாக பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக மீண்டும் ஒன்றிணையும் மக்களை போலீசார் தொடர்ந்து பேருந்துகளில் ஏற்றி கைது செய்து வருகின்றனர்.

Advertisement

Related News